அனைத்து பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச்.டி.குஷான் சமீர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்

அத்துடன் நாளை பாடசாலைகள் நடைபெறாத மாகாணங்கள், மாவட்டங்கள் பின்வருமாறு

1. சப்ரகமுவ மாகாணம்
* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகள்
* கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகள்

2. தென் மாகாணம்
*காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகள்
*மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகள்

3. மேல் மாகாணம்

* களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகள்
* கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலயம்

மேலும் நாளைய காலநிலையின் அடிப்படையில் மாகாண அதிகாரிகள் வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *