முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்று சாதித்த விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் அச்சுதன்.

31 ஆம் திகதி வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் அச்சுதன் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்றுக் சாதனை புரிந்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் சுரேஸ்குமார் அச்சுதன் கணிதப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 84 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டு கிராமத்துக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்


மாணவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *