நாட்டில் கடும் மழை ஆறுகளில் நீர் மட்டம் உயர்வு:சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் பரவலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அவசரமாக விடுத்துள்ள புதிய அறிவித்தலிலேயே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் இன்றும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடுமென, அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் நூறு மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், மழையுடன், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. களனி கங்கை, மகாவலி கங்கை, நில்வளா கங்கை மற்றும் ஜின் கங்கையை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, பெந்தர கங்கை, கிரம ஓயா, உரு பொக்கு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய கரைகளை சுற்றியுள்ள தாழ்நிலங்களும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *