’45 Under 45’ இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது 

45 Under 45′ சுயதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது வழங்கும் நிகழ்வு (16) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. 

குறுகிய காலத்தில் புதிய கண்டுபிடிப்பு முறைகளை பின்பற்றி வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்ற மற்றும் தமது திறமையினால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இளம் சுயதொழில்  முயற்சியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் விசேட விருது வழங்கும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதன் போது இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் 56 பேருக்கு விருது வழங்கப்பட்டது. 

சர்வோதய அமைப்பின் சார்பில் அதன் நிறுவுனர் மறைந்த ஏ டி ஆரியரத்னவிற்கு விசேட விருது வழங்கப்பட்டதுடன் அதனை நீடா ஆரியரத்ன  பெற்றுக் கொண்டார்.


இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, நிகழ்ச்சி ஒரு ஏற்பாட்டாளர் குளோபல் சி இ ஓ மன்றத்தின் தலைவர் அனுரா ஸ்ரீவர்த்தன என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *