மாவட்ட சுய உதவிக் குழு கூட்டம் – 2024

மாவட்ட சுய உதவிக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் (16) திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மாற்றுதிறனாளிகள் மற்றவர்களை விட சக்தி வாய்ந்தவர்கள் எனவும் இவர்களை சுய உதவிக் குழுவில் இணைப்பதன் மூலம் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கக் கூடியதாக இருக்கும் எனவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

மாவட்ட சுய உதவிக் குழு புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் சங்கத்தை வலுப்படுத்தும் முறைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

District Media Unit

Trincomlaee

#dmutrincomalee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *