பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாஹீம் உல் அஸீஸ், எச்ஐ (எம்) அவர்கள் (16) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் நட்பு ரீதியான கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கிடையில் பல வருடங்களாக நிலவி வரும் நல்லெண்ணம் மற்றும் தற்போதைய நட்புறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக நினைவு கூர்ந்தார்.

இராணுவத் தளபதி அவர்கள் அவரின் புதிய நியமனத்திற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதுடன் சந்திப்பு நிறைவுற்றது.

இச்சந்திப்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் அவர்களும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *