போலி விசாவுடன் கனடா செல்ல முயன்றவர் கைது..!

போலியான கனேடிய விசாவுடன்,மெல்சிரிபுர, மதஹபொலவைச் சேர்ந்த 34 வயதுடைய பயணி, டுபாய் ஊடாக கனடா செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக, நேற்று மாலை விமான நிலையத்திற்கு வந்தபோது (BIA) குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பயணியின் உண்மையான இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த விசா போலியானது என குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு விசேட சோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

விசாரணையின் போது அந்த நபர் கனேடிய விசாவைத் தயாரிப்பதற்காக முகவருக்கு 2 மில்லியன் ரூபாய் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.இவர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *