போலி கனடா விசா – கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது!

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரின் கனேடிய விசா தொடர்பான சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளால் இவரது ஆவணங்கள் சோதிக்கப்பட்டது, அவரது ஆவணங்கள் மீது நடாத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது விசா போலியானது என்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர் தரகர் ஒருவருக்கு 30 இலட்சம் ரூபா கொடுத்து போலி விசாவைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு சட்டவிரோதமாக கனடாவுக்குச் செல்ல முயற்சித்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *