ஹட்டன் தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்..!!

ஹட்டன் தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், அந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களும், அலுவலகத்திற்கு வரும் பல்வேறு மக்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து பல்வேறு பணிகளை மேற்கொள்வதுடன், ஹட்டன் டிக்கோயா மாநகர சபையினால் இந்த இடத்தில் குப்பைகளை அவ் இடத்தில் போட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் எவ்வித அக்கறையும் இன்றி இந்த நிலை ஏற்பட்டுள்ளது .

இந்த இடத்தில் குப்பை கொட்டுவதால் அப் பகுதியில் துர் நாற்றம் வீசுவதை காண கூடியதாக உள்ளது. ஆகையால் ஹட்டன் டிக்கோயா நகர சபை முன் வந்து உடன் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் அந்த இடத்தில் குப்பைகள் போடுவோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நகர சபை அதிகாரிகள் முன் வர வேண்டும்.

மேலும் இது குறித்து அப் பகுதியில் உள்ள மக்கள் தொகையில் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மாநகர சபை ஊழியர்கள் சேகரிக்கும் குப்பைகளை குப்பை வண்டிகளில் கொண்டு வந்து லொறி வரும் வரை இந்த இடத்தில் கொட்டியதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த குப்பைகளை அள்ளுவதற்கு லாரி வர சில நாட்கள் ஆவதால், இப்பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். .

இந்த நிலைமைகள் தொடர்பில் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் டி. வி. ப. பண்டாரவிடம் வினவியபோது, ​​இந்த இடத்தில் குப்பை கொட்டுவது தடைசெய்யப்பட்ட அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்த போதிலும், சிலரும் மாநகர சபை ஊழியர்களும் இது தொடர்பில் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *