ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன். வேகப்பந்து வீச்சாளராக ஆச்சர்யமூட்டும் வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணிக்காக வெற்றிகரமாக ஆடி வந்தார்.

 2002 ஆம் ஆண்டு தனது 20 வயதில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற அவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதே போன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஆண்டர்சன் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ள முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை ஆண்டர்சன் வசமே உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 194 ஆட்டங்களில் விளையாடி 269 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதே வேளையில் சர்வதேச டி 20-ல் 19 ஆட்டங்களில் பங்கேற்று 18 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

“ஓய்வு பெற இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன், என்னைப் போலவே பிறருக்கும் தேசத்திற்கு ஆட வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களுக்காக வழிவிடுகிறேன் என அறிவித்துள்ளார்.

21 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மைதானத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தாரோ, அதே மைதானத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். ஆண்டர்சன்.

ஒருவேளை அவர் இன்னும் 12 போட்டிகளில் விளையாடி இருந்தால், சச்சின் டெண்டுல்கரின் 200 டெஸ்ட் போட்டிகள் சாதனையை சமன் செய்திருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *