திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு..!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வானது சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் (07) இடம்பெற்றது.

இலங்கை சிறுவர் நிதியத்திற்கு, ஜப்பான் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள், சிறுவர் நிதியத்தின் பங்காளர்கள் ஊடாக மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குச்சவெளி, கோமரங்கடவெல, மொறவெவ பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 60 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் , பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சிக்கான காசோலைகளும் மற்றும் சுயதொழிலுக்கான காசோலைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக அரசு சாரா நிறுவன ஒருங்கிணைப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பி.அத்தநாயக்க, சிறுவர் நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரியரட்ணம், மாவட்ட செயலக அரசு சாரா நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் நிதியத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *