சென்னை அணி அதிரடி வெற்றி!! பஞ்சாபை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது…

பஞ்சாப் அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்களே எடுத்திருந்த நிலையில், பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர்.

168 ரன்க எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்யா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

ரஹானே 9 ரன்கள் எடுத்திருந்தபோது அர்ஷ்தீப் பவுலிங்கில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து இணைந்த டேரில் மிட்செல், ருதுராஜ் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. மிட்செல் 30 ரன்களும், ருதுராஜ் 32 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மொயின் அலி 17 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 43 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 11 ரன்களும், ஷர்துல் தாகூர் 17 ரன்களும் எடுத்தனர்.

ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் களம் இறங்கிய தோனி, ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

ஜானி பேர்ஸ்டோ 7, ரிலீ ரூசே 0, சாம் கரன் 7, ஜிதேஷ் சர்மா 0, அசுதோஷ் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களும், ஷஷாங்க் சிங் 27 ரன்களும் சேர்க்க, கடைசி ஓவர்களில் ராகுல் சாஹர், 16 ரன்னும், ஹர்ப்ரீத் பிரார் 17 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *