14 வயது சிறுமி துஷ்பிரயோகம்! 28 வயது குடும்பஸ்தர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டில் 2 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய ஆண் ஒருவரை எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் (30) உத்தரவிட்டார்.

திருமணம் முடித்து ஒரு பிள்ளைக்கு தந்தையான சந்தேகநபர், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வழக்குகளுக்கான நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இவர் 14 வயதும் 7 மாதம் கொண்ட சிறுமியை காதலித்து திருமணம் முடிப்பதாக அவரை கடந்த 10 ம் திகதி பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி செய்த முறைப்பாட்டுக்கமைய நேற்று குறித்த நபரை 2 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து இதில் கைது செய்யப்பட்டவரை இன்று (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும்  14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *