நோன்பு பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு கலை கலாசார பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு..

2024 நோன்பு பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கோறளைப் பற்று மத்திய ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கியினால் நடாத்தப்பட்ட கலை கலாசார பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் தலைமையில் மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய மைதானத்தில் 2024.04.27 சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் கலந்து கொண்டார். கெளரவ அதிதியாக பிரதி திட்டமிடல் பணிப்பாள எச்.எம்.ருவைத் சமுர்த்தி உள்ளக கணக்காய்வாளர் சிறிநாத் விசேட அதிதிகளாக முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத் வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன் கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப் வங்கி ச்சங்க தலைவர் ஏ.பி.ஏ.காதர். ஆர்.சி.பி.ஓ.தலைவர்.எஸ்.ரி.பைறூஸ் சர்வமத தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததனர்.

நிகழ்வில் எலி ஒட்டம், சாக்கோட்டம், தேங்காய் திருவுதல், கிடுகு பின்னல் கயிறு இழுத்தல், சங்கீத கதிரை, பணிஸ் சாப்பிடல், மை முட்டி உடைத்தல் என பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் வெற்றி பெற்றோருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Like

Comment

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *