வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ரியாத் பயணம்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வலுத்திறன் தொடர்பான சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை (28) முதல் நாளை மறுதினம் (29) வரை ரியாத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தால் ரியாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சிறப்புக் கூட்டம், பல்வேறு துறைகள் மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து, அன்றைய உடனடித் தீர்வுக்கான மற்றும் சிக்கலான பிரச்சினைகளையொட்டி ஒரு விரிவான உரையாடலை ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விஜயத்தின் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, “நகர்ப்புற எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்” மற்றும் “வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு, நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” ஆகிய இரண்டு அமர்வுகளில் குழு உறுப்பினராக இணைந்துகொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *