கிளிநொச்சி மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்து போட்டியில் கரைச்சி பிரதேச ஆண், பெண் இருபாலருக்குமான அணிகள் சம்பியனாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுப் பிரிவினரின் ஏற்பாட்டில் நடைபெறும் மாவட்ட விளையாட்டு விழாவின் முதற் குழு விளையாட்டாக கடற்கரை கரப்பந்து போட்டி கடந்த 23.04.2024ம் திகதி தேசிய இளைஞர் சேவை மன்ற மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கரைச்சி பிரதேச ஆண்கள் அணி பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச அணிகளை வெற்றி பெற்று சம்பியனாகியது.
பெண்கள் அணி கண்டாவளை மற்றும் பச்சிலைப்பள்ளி அணிகளை வெற்றி பெற்று சம்பியனாகியது.
வெற்றி பெற்ற கரைச்சி பிரதேச அணியினர் எதிர்வரும் ஞாயிருக்கிழமை(28) முல்லைத்தீவில் நடைபெறவுள்ள மாகாண மட்ட போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.