160வது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு!

நாட்டு மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காக வீரத்துடனும் விவேகத்துடனும் செயற்பட்டு 160 வருட பொலிஸ் வரலாற்றில் தங்கள் உயிர்களை நீத்த பொலிஸ் வீரர்களின் ஞாபகார்த்த தினம் இன்று(21) ஆகும்.

அந்தவகையில், 160வது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் காலை 7.30 மணியளவில் நினைவு கூரப்பட்டது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த டீ சில்வா கலந்து கொண்டு உயிரிழந்த பொலிஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி, தர்மபுரம், இராமநாதபுரம், அக்கராஜன்குளம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *