காயத்ரி விக்ரமசிங்க ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புத்தகங்கள், காலணிகள் கையளிப்பு..!!

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றது.

கொழும்பு 13, ஸ்ரீ குணானந்த மாவத்தையில் அமைந்துள்ள  BSG MOTOR WORKS நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொட்டாஞ்சேனை சுற்றுப்புறத்தில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளோடு கலந்து கொண்டனர்.


லண்டனில் வசிக்கும் ஒரு அன்பரின் நிதி  உதவியின் கீழ் மாணவர்களுக்கான இந்த அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன. காயத்ரி விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இந்நிகழ்வில் பாடசாலை செல்லும் மாணவர்கள், புத்தகங்கள் மற்றும் காலணிகளை பெற்று பயனடைந்தனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *