சுய உதவிக் குழுக்களுக்கு இடையிலான சந்திப்பு..!!

குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள சுய உதவிக் குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (14) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் முதல் அங்கமாக ஒட்டிசுட்டான் பிரிவில் உள்ள சுய உதவிக் குழுக்களை சந்தித்து அவர்களின் கடந்த கால செயற்பாடுகள், நிதி , மற்றும் எதிர்கால , சுய உதவிக் குழுக்களை எவ்வாறு உருவாக்குவது , கணக்கு வைப்பு முறை போன்ற பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன் இரண்டாவது அங்கமாக ஒட்டிசுட்டான் பகுதியில் உள்ள ஒளிரும் வாழ்வு அமைப்புக்கு சென்று அங்கும் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

மூன்றாவது அங்கமாக மாற்றுதிறனாளியாக இருந்தும் தனது சுய முயற்சியால் முன்னேறிய மூன்று நபர்களின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.

கண்பார்வை முற்றும் இழந்த நபர் ஒருவர் விளக்குமாறு செய்து கடைக்கு வழங்கல், கால் இயலாமை உடைய நபர் ஒருவர் இயற்கை பசளை தயாரித்து சந்தைக்கு வழங்கல், கால் இயலாமை உடைய நபர் ஒருவர் பழுதடைந்த மின் குமிழ்களை திருத்தி மீண்டும் சந்தைக்கு வழங்கல் போன்ற முயற்சிகள் இதன் போது பார்வையிடப்பட்டன.

இதன் இறுதி நிகழ்வாக துணுக்காய் பிரிவில் உள்ள சுய உதவிக் குழுக்களை சந்தித்து அவர்களின் கடந்த கால அனுபவங்கள் பகிரப்பட்டதுடன் ஒரு குழுவாக எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இவ் அமைப்பினால் மாற்றுதிறனாளிகளுக்கான மகிழ்ச்சி இல்லம் ஒன்று உருவாக்கப்பட்டமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் நேசன், குச்சவெளி அபிவிருத்தி உத்தியோகத்தர் மா.குகதாசன் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகத்தர்கள் பிரசன்னா மற்றும் தர்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *