கொக்குகளை வேட்டையாடச் சென்றவர் துப்பாக்கி வெடித்ததில் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் நண்பர் ஒருவருடன் இருவர் கொக்களை வேட்டையாட கொண்டு சென்ற துப்பாகியை இயக்கியபோது துப்பாக்கி வெடித்ததில், ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் இடம் பெற்றுள்ளதாகவும், அவருடன் சென்ற நண்பனான ஆசிரியரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை செம்மன்ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரும் அவரது நண்பனான 52 வயதுடைய ஆகிய இருவரும் இரவு உணவுக்காக கொக்கு இறைச்சியை கொண்டுவருவதற்காக சம்பவதினமான இன்று மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து அரச அனுமதி பெற்ற துப்பாக்கியுடன் குறித்த பிரதேசத்தில் கொக்குகளை சுட்டு வேடையாட சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கொக்குகளை குறிபாத்து சுட எத்தனித்த போது துப்பாகி வெடித்ததில் துப்பாக்கியை இயக்கியவரின் கழுத்துபகுதியில் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருடன் கூடச் சென்றவர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள்இடம்பெற்றது.

நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் சந்தேகத்தில் அவருடன் சென்ற நண்பனான 52 வயதுடைய ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்..

(கனகராசா சரவணன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *