மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்றது.

சமூக சேவைகள் திணைக்களமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்பினைச் சேர்ந்த வீரர்கள், சமூக சேவைக்கிளைகளினால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் என ஆண் பெண் இருபாலாரும் கலந்துகொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டி சிறப்புற நடைபெற LYCA Gnanam Foundation முதன்மையான நிதி அனுசரணையினை வழங்கியதோடு இணை அனுசரணை வழங்கினார்கள் சர்வோதயம், நாளைய முல்லைத்தீவு, BERENDINA, VAROD, ஓகன் முதலிய நிறுவனத்தினர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச வீராங்கனை திருமதி.சி.அகிலத்திருநாயகி கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக திட்டமிடல் வைத்திய அதிகாரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முல்லைத்தீவை சேர்ந்த வைத்திய கலாநிதி க.சுதர்சன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், உதவிப்பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *