தம்பலகாமம் பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு..!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு நேற்று (11) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன்போது பெண்தொழில் சுயமுயற்சியாண்மையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இதில் உள்ளூர் உற்பத்தியின் சந்தை மற்றும் பெண்களுக்கான நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் இடம் பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்,தம்பலகாமம் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *