200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு..!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வருமானம் குறைந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பதிகள் வழங்கும் நிகழ்வு Muslim AID நிறுவனத்தின் அனுசரணையுடன் நேற்று (10) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *