கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மகஜர் கையளிப்பு..!!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்றைய தினம் (11) காலை மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, மற்றும் அரசாங்க அதிபருக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

கேப்பாப்பிலவு மக்களின் ஒரு பகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இன்னும் மக்களிடம் கையளிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *