‘இந்திய அணிக்காக விளையாடுவதை நினைத்து’ வெட்கப்படுகிறேன்: வீரர் ஆதங்கம்!

இந்திய அணி வீரர் ஒருவர், பிசிசிஐ நிர்வாகிகள் மீட்டிங்கில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 16ஆவது சீசனில், முதுகு வலி பிரச்சினை காரணமாக அவதிப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர், அதன்பிறகு ஆசியக் கோப்பை தொடரில் 530 ரன்களை குவித்து அசத்தினார். தொடர்ந்து, உலகக் கோப்பையிலும் 66.25 சராசரியுடன் ரன்களை அடித்தார்.ஷ்ரேயஸ் ஐயரின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 35, 13, 27, 39 என சொற்ப ரன்களை தான் அடித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டார். அவருக்கு, முதுகு பகுதியில் தசைபிடிப்பு இருப்பதால்தான், விடுவிக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போதே, ஷ்ரேயஸ் ஐயருக்கு தசைபிடிப்பு சரியாகிவிட்டதாக, தேசிய கிரிக்கெட் அகடமி மருத்துவர்கள் ஷ்ரேயஸ் ஐயருக்கு சான்று கொடுத்தனர். இருப்பினும், ஷ்ரேயஸ் மோசமான பார்மில் இருந்ததால், அவரை கடைசி இரண்டு டெஸ்ட்களில் சேர்க்கவில்லை.

ஷ்ரேயஸ் ஐயர் உடனே, ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணியில் இணைந்து, காலியிறுதி ஆட்டத்தில் விளையாட வேண்டும் என ஷ்ரேயஸுக்கு பிசிசிஐ மெய்ல் அனுப்பியது. ஆனால், ஷ்ரேயஸ் ஐயர் தற்போதுவரை ரஞ்சிக் கோப்பை அணியில் இணையவில்லை.

இந்நிலையில், ரஞ்சிக் கோப்பை தொடரில் மும்பை அணியில் இணையாதது ஏன் என்பது குறித்து, பிசிசிஐக்கு ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”தனக்கு தசைபிடிப்பு இன்னமும் லேசாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

ஷ்ரேயஸ் ஐயர் கூறியதை ஏற்காத பிசிசிஐ, மீண்டும் ஷ்ரேயஸ் ஐயருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அப்போது, ஷ்ரேயஸ் ஐயர் முழு பிட்னஸுடன்தான் இருக்கிறார் என்பது, தெளிவாக தெரிய வந்தது. ஐபிஎலை மனதில் வைத்துதான், காயத்தை தவிர்க்க ரஞ்சிக் கோப்பையில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்த ஷ்ரேயஸ் ஐயரை, ஆண்டு ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது. அதன்பிறகு, ஷ்ரேயஸ் ஐயர் கேட்டுக்கொண்டதின் பெயரில், இவருடன் பிசிசிஐ நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய ஷ்ரேயஸ் ஐயர், ”ஐபிஎல் 2023 தொடரை புறக்கணித்து, உலகக் கோப்பைக்கு தயாராகி வந்தேன். அறுவை சிகிச்சை காரணமாக இருந்த வலியை போக்க, உலகக் கோப்பையின் போது, வலி நிவாரண ஊசியை எடுத்துக் கொண்டேன். அரையிறுதி, இறுதிப் போட்டியின்போது, எவ்வளவு வலிகளை அனுபவித்தேன் என்பது ரோஹித் சர்மாவுக்கு தெரியும்” எனக் கூறினார்.

”அதன்பிறகு தென்னாப்பிரிக்க டி20, டெஸ்ட் தொடரில் விளையாடினேன். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் விளையாடினேன். ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் மட்டும்தானே ஓய்வு கேட்டேன். அரையிறுதியில் விளையாட ஒப்புக்கொண்ட போதும், என்னை ஏன் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்குனீங்க? இந்திய அணிக்காக இப்படி கஷ்டப்பட்டு விளையாடியதை நினைத்து வெட்கப்படுகிறேன். வலியை பொருட்படுத்தாமல் விளையாடிதற்கு என்னைதான், செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்” என ஷ்ரேயஸ் கண்ணீருடன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *