அதிமுக கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டியில் த்ரிஷா பற்றி மோசமாக பேசி இருந்தார்.
ஒரு எம்எல்ஏ த்ரிஷா தான் வேண்டும் என அடம்பிடித்ததாகவும், அதற்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும் அந்த நபர் பேட்டி கொடுத்திருக்கிறார்.
சட்ட நடவடிக்கை
திரிஷா பற்றி அவதூறாக பேசிய நபருக்கு சினிமா துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக திரிஷா ட்விட்டரில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.
“பிரபலம் ஆக வேண்டும் என எந்த அளவுக்கும் கீழே இறங்குபவர்களை பார்க்க அருவருப்பாக இருக்கிறது. நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என் legal department-யிடம் இருந்து வரும்” என த்ரிஷா கூறி இருக்கிறார்.