முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பு வருடத்துக்கான அபிவிருத்தி குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பு வருடத்துக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பு வருடத்துக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமா மகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், றிஸாட் பதியுத்தீன்,சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் பங்கேற்போடு நேற்று (16.02.2024) முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் NHDA வீட்டு திட்டம், காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும், நீர்ப்பாசனம், யானை வேலி, வடிகாலமைப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, சுற்றுலாத்துறை, வீதி அபிவிருத்தி, கல்வி , சுகாதாரம்,மீன்பிடி, இது போன்ற இதர விடயங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டன.

குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள் , என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *