இலங்கைக்கு பல வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் பயன்பாட்டிற்கு தேவையான சில வாகனங்களை இறக்குமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு மூன்று வாகனங்கள், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தால் வழங்கப்பட்ட மூன்று மொபைல் அலகுகள், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் வழங்கப்பட்ட 21 இரட்டை வண்டிகள், ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய இரண்டு பேருந்துகள் மற்றும் கொரியா நிதித் திட்டத்தின் மூலம் ஒரு வாகனம் வழங்கப்பட்டது.
பொதுவாக வாகன இறக்குமதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.