இளைஞர்களுக்கான டிஜிட்டல் ஊடக கல்வியறிவை வலுப்படுத்துதல்: இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்

எதிர்கால தலைவர்களை ஊக்குவித்தல் எனும் நோக்கில் “டிஜிட்டல் ஊடக கல்வியறிவு மற்றும் போலியான தகவல்களை இல்லாதொழித்தல்” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வை, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பூரண ஆதரவுடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்தது.


ஜனவரி 12ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சி இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகத்தின், கலைப் பீடத்தின் ஊடகத்துறையில் கல்வி கற்கும் இளங்கலை மாணவர்கள் இப்பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *