யாழ் பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்பு!

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.

இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.

இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *