கச்சதீவு திருவிழாவுக்கு 8,000 பேருக்கு அனுமதி!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து 4000 பேரும் தமிழகத்தில் இருந்து 4000 பேரும் என மொத்தம் 8 ஆயிரம் பேர் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 கச்சதீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கான விண்ணப்பப் படிவத்தை நேற்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை வழங்க முடியும் என என ராமேஸ்வரம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *