இரவு நேரத்தில் மின் ஒளி இல்லாமல் தடுமாறும் சாரதிகள்..!!

சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்கள் மவுஸ்சாக்கலை சந்தியில் தடுமாற்றம் அடைவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மவுஸ்சாக்கலை முச் சந்தியில் இருக்கும் வழி காட்டி கல்லில் உள்ள அனைத்து எழுத்துக்கள் அழிந்து போய் உள்ளது.வழி காட்டி கல்லில் வழிகள் முறையாக இருந்தால் சாரதிகள் அதைப் பார்த்து வாகனங்களை செலுத்த முடியும்.


ஆகையால் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன் வந்து முவுசாக்கலை சந்தியில் உள்ள வழிகாட்டி கல்லில் புதுப்பித்து எழுதுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்துடன் அந்த சந்தியில் இரவு நேரத்தில் மின் குமிழிகள் பொருத்த இலங்கை மின்சார சபை முன் வர வேண்டும்.

கடந்த காலங்களில் அவ்விடத்தில் சோலாபவர் மின் குமிழிகள் பொருத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


மஸ்கெலியா நிருபர்.செ.தி பெருமாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *