முதலாவது வெற்றியை பதிவு செய்த இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அணித்தலைவர் கிரேக் எர்வின் 82 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்‌ஷன 4 விக்கெட்டுக்களையும்இ துஷ்மந்த சமீர மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளனர்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 211 ஓட்டங்கள் பெற்று 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

மேலும் இந்த போட்டியில் ஜனித் லியனகே சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 127 பந்துகளில் 95 ஓட்டங்கள் குவித்திருந்ததோடு ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *