யாழ் – கொழும்பு தொடருந்து சேவை இடைநிறுத்தம்! 

யாழ் – கொழும்பு தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான தொடருந்து மார்க்கமானது, ஜனவரி 07 முதல் 06 மாதத்திற்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை செல்லும் தொடருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *