இன்றுமுதல் விடுமுறை:மகிழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள்..!!

இன்றுடன் அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேசமயம் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,298 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *