சோளம் இறக்குமதிக்கு அனுமதி..!!

15,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கோழி தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக நடவடிக்கையாக இந்த சோளம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

இலங்கை இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தில்  பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வழங்குனர்களிடம் இருந்து இந்த சோளத்தை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *