என் ராஜீவை என்னிடம் திருப்பிக் கொடுங்கள்..!!

என் ராஜீவை என்னிடம் திருப்பிக் கொடுங்கள் நான் திரும்பி போகிறேன். உங்களால் முடியாது எனில் என்னையும் இந்த மண்ணில் கலந்துபோகவிடுங்கள்.

நீங்கள் கவனித்தது உண்டா? அவரின் பரந்த நெற்றி, ஆழமான கண்கள், உயரம் மற்றும் புன்னகை. நானும் முதன்முறையாக அவரைப் பார்த்தபோது, ​​

அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். தோழர்களிடம் கேட்டேன்- யார் இந்த அழகான இளைஞன். என்ன ஒரு அழகு! பேரழகன் என்றேன். நண்பர்கள் சொன்னார்கள் அவர் ஒரு இந்தியர் என்று. பண்டிட் நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று. நான் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்

நேரு குடும்பத்தைச் சேர்ந்த பையனை. சில நாட்களுக்கு பிறகு பல்கலைகழக உணவகம் சென்றேன். அவர் தன் நண்பர்களுடன் இருந்தார். அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் கண்களை உயர்த்தியபோது, ​​அவர் என்னைப் பார்த்தார். கண்கள் ஒரு கணம் சந்தித்தன, இருவரும் தயங்கினோம்.

என் கண்களை எடுத்தேன், ஆனால் என் இதயம் வேகமாக துடித்தது. மறுநாள் நான் மதிய உணவுக்கு அங்கு சென்றபோது, ​​அவர் அங்கேயே இருந்தார். அது கண்டதும் காதல். அந்த நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தது. அது சொர்க்கமாக இருந்தது. நாங்கள் ஒன்றாக ஹேங்அவுட் செய்வோம், ஆறுகள் வழியாக, காரில் நீண்ட டிரைவ்களுக்கு செல்வோம்,

தெருக்களில் கைகோர்த்து நடப்பது, திரைப்படம் பார்ப்பது. நாங்கள் ஒருவருக்கொருவர் காதலை முன்மொழிந்தோமா என்பது எனக்கு நினைவில் இல்லை. தேவை இல்லை, எல்லாம் இயற்கையானது, நாங்கள் ஒருவருக்கொருவர் உருவாக்கப்பட்டோம்.நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம் நிரந்தரமாக. அவரது தாயார் பிரதமரானார்.

அவர் அம்மா இங்கிலாந்து வந்ததும், ராஜீவ் அவர் அம்மாவை சந்தித்தார். திருமண அனுமதி கேட்டோம். இந்தியாவுக்கு வரச் சொன்னார்.

இந்தியா என்ன? உலகில் எந்த மூலையில் வேண்டுமானாலும் நான் ராஜீவுடன் வாழ தயாராக இருந்தேன். அதனால் இந்தியா வந்தேன். நேரு ஜியால் நெய்யப்பட்ட, காதியால் செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற புடவை, இந்திரா ஜி தனது திருமணத்தில் அணிந்த அந்த சேலையை எனக்கு எங்கள் திருமணத்தில் அணிய பரிசாக தந்தார் இந்திரா. அதை அணிந்ததன் மூலம், நான் அந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறினேன். எனது வேண்டுதலை வாழ்க்கையை இறைவன் வண்ணங்களால் நிரப்பியிருந்தார். நான் ராஜீவுக்கு சொந்தம், ராஜீவ் எனக்கு சொந்தம்,

நான் இந்த இடத்தை இந்த மண்ணை சேர்ந்தவள் என புரிந்துகொண்டேன்.

நாட்கள் சிறகடித்து பறந்தன. ராஜீவின் தம்பி மறைந்துவிட்டார். இந்திராஜிக்கு ஆதரவு தேவைப்பட்டது. ராஜீவ் அரசியலுக்கு வரத் தொடங்கினார். எனக்கு பிடிக்கவில்லை, வேண்டாம் என்று சொன்னேன். எல்லா முயற்சியும் எடுத்தேன், ஆனால் இந்தியாவில், தாய்க்கு முன்னால் மனைவியின் சொல் எங்கே எடுபடுகிறது? அவர் அரசியலுக்கு சென்றார், அவர் அப்படி அரசியலுக்கு சென்றபின் என் மீதான அன்பு குறைந்துபோனதாக நான் நினைத்தேன். எனக்கு சொந்தமான ராஜீவை இந்தியா தனக்கும் பங்கு வேண்டுமென வாங்கி கொண்டது.

அவர் மீதான எனது உரிமையின் பங்கு குறைந்தது. ஒரு நாள் இந்திரா ஜி வீட்டுக்கு வெளியே சென்றபோது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ஓடி வந்து நான் பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்தார். குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தார். அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினேன்.

அவரது ரத்தத்தில் என் உடைகள் நனைந்து கொண்டே இருந்தன. என் கைகளில் இறந்தார்.

மரணத்தை இவ்வளவு அருகில் பார்த்ததுண்டா? அன்று என் வீட்டில் ஒருவரல்ல இரண்டு பேர் குறைந்தனர். ராஜீவ் முற்றிலும் நாட்டைச் சேர்ந்தவர். நான் பொறுத்துக்கொண்டேன், சிரித்தேன், விளையாடினேன்.

எனக்கானவர் என்று யாரை நினைத்தேனோ , அவரை இந்திய நாட்டுடன் பகிர்ந்து கொண்டேன். ஆனால் எனக்கு என்ன திரும்ப கிடைத்தது? ஒரு நாள் அவரது பிணம் திரும்பி வந்தது. துணியால் மூடப்பட்ட உடல். அவரது சிரித்த, ரோஜா போன்ற முகத்தை கல்லாக மாற்றி திருப்பிதந்தீர்கள்.

அவருடைய கடைசி முகத்தை நான் மறக்க விரும்புகிறேன். அந்த உணவகத்தில் அந்த பர்ஸ்ட் லுக், அவருடன் கழித்த இனிய மாலை பொழுதுகள், அந்த சிரிப்பு. அதைத்தான் நான் நினைவில் கொள்ள விரும்புகிறேன்.

நான் ராஜீவுடன் செலவிட்ட நேரத்தை விட

ராஜீவ் இல்லாமல் இந்த நாட்டில் அதிக நாட்களை கழித்திருக்கிறேன். இயந்திரம் போல் நான் வேலை செய்தேன். அதிகாரம் இருக்கும் வரை இந்தியாவின் மரபு சிதையாமல் பார்த்துக்கொண்டேன். இந்த நாட்டிற்கு செழுமையான மிகவும் புகழ்பெற்ற நல்ல தருணங்களை வழங்கி இருக்கிறேன்.

வீட்டையும் நாட்டையும் நன்றாக கவனித்து கொண்டேன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். நான் என் வேலையை செய்துவிட்டேன். ராஜீவுக்கு கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டேன்.

ஆனால் நீங்கள் என்னைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

வெளிநாட்டவர், பார் கேர்ள், ஜெர்சி மாடு, விதவை, கடத்தல்காரர், உளவாளி…

ஆனால் நான் வருத்தப்படவில்லை. அப்படி சொல்பவரை பார்த்தால் அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன். அவர்களுக்காக நான் வருந்துகிறேன். ஒரு தொலைக்காட்சி சேனலில் கொடுக்கப்படும் முறைகேடுகள் என்னை காயப்படுத்தாது.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கின் கட்டுப்பாடின்றி பேசும் போக்குகள் காயப்படுத்துமா என்னை?இல்லை, நான் நிச்சயமாக பரிதாபப்படுகிறேன்.

நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் நேசித்த ஒருவரின் சடலத்தைப் பார்ப்பது தான் மிகப்பெரிய வலி. அதற்குப் பிறகு வலி இல்லை. மனம் கல்லாக மாறும்.

ஆனால் நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், நிச்சயமாக நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள். இன்றே திரும்பி போகிறேன். ஆனால் திரும்ப ராஜீவை தாருங்கள். அவரோடு நான் போய்விடுகிறேன்.

அவரை திருப்பித் தர முடியாவிட்டால்,

ராஜீவைச் சுற்றி அமைதியாக, இங்கே எங்காவது ஒரு மூலையில் இந்த மண்ணில் கலந்துவிட அனுமதி தாருங்கள். இந்த நாட்டின் மருமகளுக்கு இந்த அளவு உரிமையாவது கிடைக்க வேண்டும்.

(திருமதி. சோனியா காந்தியின் கடிதத்திலிருந்து ஒரு பகுதி!)

The Unreal Realities பதிப்பிலிருந்து..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *