ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்..!!

2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பனவும்
சான்றுரைப்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத்தில் இன்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த ராஜபக்ஷ தனது
கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெறுமதிசேர்
வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் இன்று சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க பெறுமதிசேர்
வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும்
2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *