கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் நேரடி விமான சேவை..!!

ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம், கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

165 சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று மதியம் 12.50 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குறித்த விமானம் தரையிறங்கியது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) நிறுவனம் வந்திறங்கிய விமானத்தை நீர் தாரைகையுடன் வரவேற்றது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விமான குழுவினரையும் சுற்றுலா பயணிகளையும் வரவேற்க பாரம்பரிய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நேரடி விமான சேவை ஏப்ரல் 2024 வரை செயல்படும்.

images -daily mirror

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *