இன்றும் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டில் மழையின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *