பாடசாலை அதிபர் விளக்கமறியலில்..!

பொலித்தீனை பலவந்தமாக பாடசாலை மாணவர்களுக்கு உண்ண வைத்த சம்பவத்தில் கைதான அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 05 மாணவர்களே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (29) நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரான அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *