காசாவில் போர் நிறுத்தம்.. !

இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.

தாக்குதல் 46 நாட்களை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. ஹமாஸ் அமைப்பினரும் பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். கட்டார் நாடு ஏற்பாட்டை செய்தது.

இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியில் இருந்து நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தாது.

அதன்பின் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படு இருக்கிறார்கள்.

முதலில் பெண்கள் அவர்களின் குழந்தைகள் என்ற அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள்.
இஸ்ரேலும் தங்களது சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்யவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *