பத்தாம் வகுப்பில் O/L பரீட்சை. மிக விரைவில் பிரேரணை..!

பதினோராம் வகுப்பில் நடத்தப்பட்டு வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையை. எதிர்காலத்தில் பத்தாம் வகுப்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பில் குறிப்பிட்டார்.

இது சம்பந்தமான பிரேரணை பாராளுமன்றத்தில் மிக விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி ஒரு மாணவர் தன்னுடைய 17ஆவது வயதில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *