சர்வதேச T20 போட்டிகளிலிருந்து விடைபெற்றார் விராட் கோலி…

சர்வதேச T20 போட்டிகளிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். T20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து விடை பெற்றுள்ளார் விராட் கோலி.

டி20-யில் இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை. நாங்கள் எதை விரும்பினோமோ அதை சாதித்துள்ளோம். இப்போது இல்லையென்றால் எப்போது இல்லை என்ற சூழலை எதிர்கொண்டோம். அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்து விட்டது. இது என்னுடைய 6 ஆவது உலகக்கோப்பை போட்டி. ரோஹித் சர்மாவுக்கு இது 9 ஆவது உலகக்கோப்பை போட்டி. கோப்பையை வெல்ல அவர் தகுதியானவர். என்று கூறினார்.