பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை சந்தித்த செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்திப்பு (26)இடம்பெற்றது.

கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்காக உகன தேசிய பூங்கா வாயிற்கதவுகளை திறக்கும் திகதிகள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனுடன் பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஜூன் மாதம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு வாயிற்கதவுகளை திறப்பதற்கு தயாராகுமாறு அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.