மேற்குவங்க மாநிலத்தில் 15 பேரை பலியெடுத்த ரயில் விபத்து!

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்ைக நேற்றுப் பிற்பகல் 15 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதாலேயே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது. இவ்விபத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளனர். நின்று கொண்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டு, அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என நேற்றுப் பிற்கல் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இச்சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.  இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளைப் பற்றிய தகவல்களை குடும்பங்கள் தொடர்பு கொள்ள உதவும் ஹெல்ப்லைன் எண்களின் பட்டியலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.