கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!

உலக சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் மரம் நடுகை (06) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.