பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்..!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு.சுப்பிரமணியம் ஜெயசங்கர் இன்று (4) பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து அவரது புதிய பொறுப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடினார்.