இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!

மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

சார்ஜா மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணியின் தலைவி பாத்திமா சனா 30 ஓட்டங்களை பெற்றதுடன், நிடா டர் 23 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் உதேஷிகா ப்ரபோதினி சுகந்திகா குமாரி மற்றும் சமாரி அதபத்து ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் நிலக்ஷிகா சில்வா அதிகபட்சமாக 22 ஓட்டங்களை பெற்றதுடன்,விஷ்மி குணரத்ன 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சாதியா இக்பால் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.