‘மனசிலாயோ’ தீப்தி சுரேஷ்.. யார் அவர்?.. பின்னணி இதோ..!!

வேட்டையன் படத்தின் மானசிலாயோ பாடல் மூலம் மனதை கவர்ந்துள்ள தீப்தி சுரேஷ், பான் இந்திய பாடகியாக மாறி உள்ளார். ஏஆர் ரகுமான், அனிரூத்தின் ஆஸ்தான பாடகிகளில் ஒருவராக தமிழ், இந்தி, தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.’ பட்டித் தொட்டியெங்கும் அதிர வைத்து வரும் இந்த பாடலின் தனித்துவமான பெண் குரல் யார் என்று தேடிப் பார்த்தவர்களுக்கு தெரியும்…. சித் ஸ்ரீராம், பிரவீன்குமார் வரிசையில் இளசுகளின் ப்ளே லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் தீப்தி சுரேஷ் என்று…

அடிப்படையில் கர்நாடக இசை கலைஞரான இவரின் பவ்யமான தோற்றத்தை பார்த்து ஸ்ரேயா கோஷல் போல் மெலடியில் மயக்குவார் என்று எண்ணவேண்டாம். பேச்சுக்கும் பாட்டுக்கும் சம்மந்தமே இல்லை என்று கூறும் அளவிற்கு அதிரடி பாடல்கள்தான் இவரது அடையாளம். 10 பேர அடிச்சி ரவுடியாகல நான் அடிச்ச 10 பேருமே ரவுடிதான் என்று ராக்கி பாய் பாணியில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள். அதனால்தான் என்னவோ, தமிழ்நாட்டில் இருந்து சென்ற பான் இந்திய பாடகிகள் பட்டியலில் சீக்கிரமே இடம் பிடித்து விட்டார் தீப்தி சுரேஷ்.

முதன்முறையாக மாறா படத்தில் உன்னைதானே பாடல் மூலம் மனதை மென்மையாக வருடியவர், பின்னர் மெல்ல தனது பாணியை உருமாற்றி திரையில் தீப்பறக்க வைத்து வருகிறார். தமிழில் மட்டும் கலக்கினால் போதுமா என பாலிவுட் மற்றும் டோலிவுட் பக்கத்திற்கு அனிரூத் அழைத்து சென்று ஜவான் படத்துக்காக பாடவைத்தார். ஏற்கனவே பத்து தல படத்துக்காக இந்தியில் தீப்தி பாடியிருந்தாலும், ஆராரிராரோ பாடல் வட இந்திய மெலடி விரும்பிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த பாடல் பிலிம் பேர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

ஏ.ஆர்.ரகுமான், அனிரூத் படங்களில் தீப்திக்கு ஒரு பாடல் கட்டாயம் உண்டு என்ற அளவிற்கு இருவரும் மாறி மாறி வாய்ப்பு தந்து வரும் நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கங்குவா படத்திற்கு பாடிய இந்த பாடல்தான் தீப்தியின் புது வரவு… 12 FAIL, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களின் தெலுங்கு பாடல்களும் இவரது குரலில் ரசிகர்களை கவர்ந்தன. தனது தனித்துவமான குரல் வளத்தால் பான் இந்திய பாடகியாக மெல்ல உருவெடுத்து வரும் தீப்தி சுரேஷ், சினிமா இசையுலகில் தனக்கென தனி இடத்தை பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.